Monday, August 27, 2018

வவுனியா சுத்தானந்த விலாஸ்



இன்று காலை வவுனியா வந்தடைந்தவுடன் புகையிரத நிலையத்திலிருந்து பொடிநடையாக சுத்தானந்த விலாஸ் வந்தடைந்தோம். எனக்கு தோசையும் நண்பருக்கு இட்லியும் கூடவே உளுந்து வடையும் வரவழைத்தோம். தொட்டுக்கொள்ள புசனி சிறுபருப்பு சாம்பாரும் காரமான மிளகாய் மற்றும் தேங்காய் துவையல்.





தோசை பார்க்க தடிமனாக இருந்தாலும் சாப்பிட மிருதுவாக இருந்தது. இட்லி மோசமில்லை. ஆனால் வடை மிகமிக கடினம். கடைசியாக இருவருக்கும் பால் சேர்த்த தேனீர் வந்தது. இரண்டு பேர் குடிக்கலாம் என்று அளவில் இருந்தது. மொத்த பில் 280LKR. நம் இந்திய மதிப்பில் சுமார் 127 ரூவாய்.





ஒவ்வோரு டேபிளுக்கு கீழும் ஒரு தொட்டி வைத்திருந்தனர். சாப்பிட்டவுடன் தட்டில் இருந்த பிளாஸ்டிக் கவரை அதில் போட வேண்டும். சுவரில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு தாள்கள் tanglish பேசும் சென்னைவாசிகலான எங்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தன என்றால் மிகையாகாது.