Saturday, April 20, 2019

இளநீர் சர்பத்


வெயில் காலத்துல மதுரையில் இயற்கையான பானங்களுக்கு பஞ்சமேயில்லை. ப்ரூட் மிக்சர், பானகம், ஜிகர்தண்டா, மோர், சர்பத், பதநீர் என்று பல உண்டு. மேல மாசி வீதி தாண்டி போனால் தமிழ் சங்கம் சாலையில் ஜானகிராமன் உணவகத்திற்கு எதிரில் ஒரு ஸ்பெஷல் பானம் கிடைக்கும்.





இளநீர் மற்றும் அதனுள் இருக்கும் இளம் தேங்காயை கீரி சர்பத் மற்றும் ஐஸ் கலந்து இளநீர் சர்பத் என்ற பெயரில் சரவணன் என்பவர் விற்பனை செய்கிறார். எப்பொழுதுமே கூட்டம் இருக்கும். சர்பத் கொஞ்சம் குடிக்க தேங்காய் கொஞ்சம் கடிக்க என டேஸ்ட் செமயா இருக்கும். ஒரு கிளாஸ் விலை ஜஸ்ட் நாற்பது ரூபாய்தான். பேசி விட்டு காசு கொடுத்தால் வாங்க மறுத்துவிட்டார். நீங்க போனால் என் கிளாஸுக்கும் காசு கொடுத்துடுங்க 😉







கூகிலாண்டவர் வழிகாட்டி:

No comments:

Post a Comment