ஞாயிறு காலை அசோக் நகர் ஆஞ்சநேயரை தரிசித்து விட்டு வண்டியை எடுத்தால்
செம பசி. சுற்றிலும் சங்கீதா தெசி, குப்தா பவன், கிருஷ்ணா பவன் என சைவ
உணவகங்கள்.
திருச்செந்தூர் சென்று முருகனை தரிசித்தால் அடுத்து
செய்தாக வேண்டிய கடமை மணி அய்யர் மெஸ்ஸில் டிபன் சாப்பிடனும் என்று அங்கு
சென்றவர்கள் சிலாகித்து கேட்டதுண்டு. புதிதாக சென்னையில் அதுவும் அசோக்
நகரில் அவர்களின் கிளை ஆரம்பித்துள்ளனர் என்று அன்பர் கேபிள் சங்கர்
பிளாக்கில் பதித்த நியாபகம். சரி இன்று சுவைத்து பார்த்துவிடலாம் என்று மணி அய்யர் ஹோட்டல் செல்வதாக முடிவானது.
வண்டியை பார்க் செய்து விட்டு வந்து தரை தளத்தில் உள்ள சேரில் அமர்ந்தால்
நூறு ரூபாய்க்கு அன்லிமிடெட் டிபன் என்ற நோட்டீஸ் கண்ணில் பட்டது.
சர்வரிடம் கேட்டதர்க்கு முதல் மாடியில் தான் பஃபே என்றார். சரி என்று மினி
டிபன் (50₹) ஆர்டர் செய்தோம்.
மினி டிபன் பெயருக்கு ஏற்றார் போல் மினி வடையுன் வந்தது. ஒரு ஸ்கூப்
வென்பொங்கல், இட்லி, முறுகலான தோசை மற்றும் கொஞ்சம் கேரட் அல்வா. முதலில்
அல்வாவை ஒரு வில்லல் எடுத்து சுவைக்க... நெய் கலந்த தெய்வீகமான சுவை.
அரைத்து விட்ட சாம்பார், மூன்று வகை சட்னி, இட்லி பொடி, நல்லெண்ணெய்
மற்றும் சக்கரை(காபியில் கலக்க) என தேவையான condiments எல்லாம் டேபிளில்
ஏற்கனவே வைத்திருந்தனர். மகிழ்ச்சி. ஒவ்வொரு தடவையும் சர்வரை கூப்பிட
வேண்டிய அவசியமில்லை. அந்த வயதான சர்வர் பொடியை போட்டுக்கோங்கோ எண்ணையை
ஊத்திக்கோங்கோ என செம கவனிப்பு. பொடிக்கு தனியாக காசு வாங்கற உணவகங்களில்
கூட இப்படி சொல்ல மாட்டார்கள். என்னடா எல்லாமே நல்லா அமையுதே நம்ம வாழ்க்கை
இப்படி போகாதே என்று நினைத்த நொடி சற்று கடினமான இட்லி அகப்பட்டது.
சாம்பாரும் சட்னியும் நல்லா இருந்ததால் சாப்பிட முடிந்து. பொங்கலும்
தோசையும் நன்று.
கடைசியாக டபரா செட்டில் மினி ஃபில்டர் காபி சர்க்கரை
இல்லாமல் வந்தது. நாம் தான் சர்க்கரை போட்டுக்கொள்ள வேண்டும் போல். ஃபேஷ்
ஃபேஷ். அனைத்து டிபன் வகையறாவும் சுவைக்க ஐம்பது ரூவா சல்லி விலைதான். என்ன
இட்லி மட்டும் மிருதுவாக இருந்திருந்தால் இன்னும் சிறப்பாக
இருந்திருக்கும்.
முகவரி:
Hotel Tiruchendur Mani Iyer
31/69, 7th Ave, Sarvamangala Colony, Indira Colony, Ashok Nagar, Chennai





No comments:
Post a Comment