வடசென்னையில் குறிப்பாக ஜார்ஜ் டவுன் ராயபுரம் ஏரியாக்களில் பிரியாணி
கேட்டால் புலாவ் மாதிரி ஒரு தேங்காய்பால் சோற்றுக்கலவை தருவார்கள். இன்று
அதை தென் சென்னையிலேயே சுவைக்க நேர்ந்தது.
மதிய உணவிற்கு வடபழனி
ஃபோரம் மாலிற்கு அடுத்து அமைந்துள்ள பாண்டியாஸ் செல்ல நேர்ந்தது.
கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு முன்பு வந்தபோது ஏசியெல்லாம் இருந்த
மாதிரி நியாபகம் இல்லை. ஆனால் இப்பொழுது ஏசி, சைனீஸ், அரபியன், கிரில் என
காலத்திற்கேற்ப மாற்றம்.
பாண்டியாஸுக்கு பழைய வண்ணாரப்பேட்டை மற்றும் ராயபுரத்தில் கிளைகள் உண்டு.
ஸ்டார்டர்ஸ் எதுவும் சொல்லாமல் நேராக மட்டன் நல்லி பிரியாணி (280₹) மற்றும்
சிக்கன் 65 பிரியாணி(280₹) என ஆர்டர் செய்தோம். முதலில் பெரிய வாழை இலையை
வைத்தனர். இப்பெல்லாம் வாழை இலையை ஏசி ரெஸ்டாரண்ட்களில் பார்ப்பதே
அரிதாகிவிட்டது.
மீடியம் சைஸ் பாஸ்மதி அரிசியில் தேங்காய்பால் ஊற்றி தனியா சற்று
தூக்கலாக இட்டு சமைத்த சற்று குழைவாக பச்சை நிறத்தில் இருந்தன இரண்டு வகை
பிரியாணிகளும். காரம் என்பது பேச்சுக்கு கூட கிடையாது. இதை மதுரையில்
தேங்காய் சோறு என்பார்கள். கண்டிப்பாக மதுரைக்காரர்கள் இதை பிரியாணி என
ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சற்று வித்தியாசமான சுவை. பெங்களூரில் மட்டன்
புலாவ் சாப்பிட்டவர்கள் ரசித்து உண்பார்கள். உடன் நல்ல கட்டியான வெங்காய
பச்சடியும் காரமற்ற சாப்ஸ் குருமாவும் வந்தன.
மட்டன் பிரியாணியில்
இரண்டு சுற்றி கறியுடன் கூடிய நல்லி (மற்றும் வேக வைத்த முட்டை). என்ன
பொதுவெளியில் சத்தமாக தட்டி சாப்பிடத்தான் கஷ்டமாக இருந்தது. சிக்கன் 65
பிரியாணியில் நாலு மீடியம் சைஸ் சிக்கன் 65 பீஸ்கள். நல்ல ஸாப்டான பீஸ்கள்.
கண்டிப்பாக இந்த ஸ்டையில் பிரியாணியை அடிக்கடி சாப்பிட முடியாது.
கிஞ்சிற்றும் காரம் இலையெனில் நமக்கு செட் ஆகாது. ஆனால் குழந்தைகளுக்கு
அருமையாக செட் ஆகும். வித்தியாசமான அதுவும் வடசென்னை ஸ்டெயிலில் உள்ள
பிரியாணியை(முயல் உட்பட) சுவைக்க தரமான இடம்.
முகவரி:
Hotel Pandia's
189, Arcot Rd, Opposite Kamala Theatre, Vadapalani, Chennai








No comments:
Post a Comment