Thursday, December 20, 2018
மதுரை பாண்டியன் ஹோட்டல்
அலுவலகத்தில் இரவு நேரம். என் பின்னாடி உட்கார்ந்திருந்த மக்கள் புதிதாக திறக்கப்பட்ட "மதுரை பாண்டியன் ஹோட்டல்" செல்வதாக பேசிக்கொண்டிருந்தனர். இந்த உணவகத்தை பற்றி பல முறை நண்பர்கள் கூற கேள்விப்பட்டதுண்டு. சிறுது நேரத்தில் அக்குழுவில் நானும் இன்னும் பிறரும் சேர்ந்து செம பசியோடு இரவு உணவருந்த கிளம்பினோம்.
ராமாபுரம் டி.எல்.எப் எதிரில் அமைந்திருக்கிறது பாண்டியன் ஹோட்டல். முதலில் ஆளுக்கோரு பன் பரோட்டா (ஒன்று 30₹) வந்தது. சைவ மற்றும் அசைவ சால்னா இரு சட்டிகளில் டேபிளில் வைத்தார் உணவு பரிமாறுபவர்.
பன் பரோட்டா சொல்லிக்கொள்ளும்படி இல்லை. நடுப்பகுதி சரியாக வேகவில்லை. மதுரையில் பன் பரோட்டா சாப்பிட்டவர்களுக்கு இது மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும்.
அடுத்து மட்டன் பிரியாணி(200₹) மற்றும் மட்டன் ஈரல் வறுவல்(180₹). வழக்கம் போல வெங்காயம பச்சடியும் கூடவே வந்தது. சீரக சம்பா பிரியாணி அட்டகாசம். மட்டன் பீஸ் ஒவ்வொன்றும் செம பிரஷ் அண்டு ஸாப்ட். இதுல நல்லி பீஸ் வேற நமக்கு வந்துச்சு. ஈரலோ வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை கலந்து ஃப்ரை செய்து அருமையாக இருந்தது. அடுத்த முறை வந்தால் இவ்விரண்டையும் ஆர்டர் செய்ய இப்பவே முடிவு செஞ்சாச்சு.
கடைசியாக ஒரு முட்டை லாபா(90₹). நல்ல கிரிஸ்பியாக வெங்காயம் கலந்த முட்டையை அடிச்சு ஸ்டப் செய்து சமைத்திருந்தனர். இது சைவ குருமாவோடவே அருமையாக இருந்தது. காரமான அசைவ சால்னா கூட எப்படி இருக்குமென நினைத்துப்பாருங்கள்.
கடைசியாக ரசம் ஒரு கப் வாங்கி இறக்கியாச்சு. இதுல வசதி என்னான்னு இங்கு சூப் வாங்க வேண்டிய தேவையே இல்லை. இலவசமாக கிடைக்கும் சூடான ரசமே காரமா அருமையா இருந்தது.
மொத்தத்தில் பன் பரோட்டாவை தவிர அனைத்துமே செம டேஸ்ட். சாப்பாடு கூட நல்லா இருக்குமென்று நண்பர் கூறினார். ஒரே பிரச்சினை என்னவென்றால் கூட்டம் அதிகமாக வருவதால் டேபிள் கிடைக்க வெயிட் பண்ணனும்.
Thursday, December 13, 2018
கேழ்வரகு மற்றும் அரிசி புட்டு
சிறு வயதில் நமக்கு கிடைத்த அரிய திண்பண்டங்களை இப்போது பார்த்தால்
எப்படி இருக்கும். இன்று காலை காமராஜர் சாலையில் செல்லும் போது அரசமரம்
பிள்ளையார் கோவில் எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவர் எதோ ஒன்றை விற்பனை
செய்ததையும் சுற்றிலும் சிலர் அதை வாங்கி கொண்டிருந்ததையும் பார்க்க
நேரிட்டது. பக்கத்தில் சென்றால், அரிசி மற்றும் கேழ்வரகு புட்டை பெரிய டபரா
சட்டியில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார்.
தொண்ணூருகளின் ஆரம்ப காலங்களில் பாண்டிய வேளாளர் தெரு சந்தையில் ஒருவர் தினமும் காலையில் இவ்விறு வகை புட்டுகளையும் விற்பார், அதை 25 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ஞாபகம். இப்போதெல்லாம் அவர் சந்தைக்கு வருவதில்லை. சென்னையில் எங்கும் இவ்வகை பண்டங்களை பார்த்தது இல்லை.
உதிர்ந்த கேழ்வரகு மற்றும் அரிசி புட்டுகளை தேங்காய் துருவல் சேர்த்து சில பாக்கெட்டுகள் (ஒன்று 10₹) வாங்கிய பின் வண்டியை வீட்டிற்கு திருப்பினேன். இரண்டுமே சுவை மிகுந்தவை, அதிலும் அரிசி புட்டு 👌👌👌
முக்கியமான விஷயம், காலையில்(6 - 8 மணி) மட்டுமே இது கிடைக்கும்.
தொண்ணூருகளின் ஆரம்ப காலங்களில் பாண்டிய வேளாளர் தெரு சந்தையில் ஒருவர் தினமும் காலையில் இவ்விறு வகை புட்டுகளையும் விற்பார், அதை 25 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ஞாபகம். இப்போதெல்லாம் அவர் சந்தைக்கு வருவதில்லை. சென்னையில் எங்கும் இவ்வகை பண்டங்களை பார்த்தது இல்லை.
உதிர்ந்த கேழ்வரகு மற்றும் அரிசி புட்டுகளை தேங்காய் துருவல் சேர்த்து சில பாக்கெட்டுகள் (ஒன்று 10₹) வாங்கிய பின் வண்டியை வீட்டிற்கு திருப்பினேன். இரண்டுமே சுவை மிகுந்தவை, அதிலும் அரிசி புட்டு 👌👌👌
முக்கியமான விஷயம், காலையில்(6 - 8 மணி) மட்டுமே இது கிடைக்கும்.
Saturday, December 8, 2018
கூரை கடை பன் புரோட்டா
பரோட்டா கேள்விப்பட்டு இருப்பீர்கள். பன் புரோட்டா சுவைத்ததுண்டா. போன வாரம் தான் மதுரையில் அதை சுவைக்க நேரிட்டது.
ஓர் இரவு என் மச்சானுடன் பன் புரோட்டா கடையை நோக்கி ஒரு பயணம். அண்ணா நகர் ஆவின் பாலகம் அருகாமையில் உள்ள புகழ்பெற்ற பன் புரோட்டா கடை தான் செல்வதாக நினைத்தேன். ஆனால் மச்சானோ அது ரோட்டோரக் கடை அதனால் வேறு கடை செல்வோமென சொல்ல, வண்டியை ஆவின் சிக்னலில் இடது பக்க வாட்டில் சிவகங்கை ரோட்டில் திருப்பினேன்.
சிறிது தூரம் சென்றதும் (கோனார் மெஸ் தாண்டியதும்) வலது பக்கத்தில் ஒரு கூரை வேய்ந்த கடையை சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்தது. கடைக்கு பேர் கிடையாது. அதனால் மக்கள் கூரை கடை என்றுதான் அழைப்பார்கள்.
இருவரும் உள் நுழைந்து சாப்பிட இடத்தை பிடித்தோம். மிகச்சிறிய உணவகம். குடும்பதோடு செல்ல உகந்தது அல்ல. அதனால் தானோ என்னவோ பார்சலுக்கு நிறைய பேர் வந்திருந்தனர். இலை வைத்த பிறகு, ஆளுக்கு ரெண்டு புரோட்டாவும்(ஒன்று 15₹) பிறகு ஒரு மட்டன் சுக்காவும்(90₹), வழியல் (similar to scrambled egg..சென்னையில் கலக்கி என்றழைக்கப்படும்) மற்றும் ஆம்லெட் சொன்னோம்.
பன் புரோட்டா தாருமாறு டேஸ்ட். மேல் பகுதி மொறு மொறுப்பாகவும் உட்பகுதி மென்மையாகவும் மிக மிக அருமை. இங்கு விசேஷம் என்னவென்றால் புரோட்டாவிற்கு கொடுக்கப்படும் பல வகையான க்ரேவீஸ். பாயா, ஈரல் குழம்பு, எழும்பு குழம்பு மற்றும் குடல் குழம்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஈரல் குழம்பு தான் சிறிது உரைப்பு அதிகம்.
மட்டன் சுக்காவில் வெங்காயம் தான் அதிகம், ஆனால் சுவையில் எந்த குறையுமில்லை.
அது என்ன மாயமோ தெரியலை, மதுரையில் மட்டும் புரோட்டாவிற்கும் கூட கொடுக்கற சால்னாவிற்கும் அப்படி ஒரு சுவை. சென்னையில் அப்படி ஒரு சுவையான பரோட்டாவை பார்த்தும் இல்லை சுவைத்தும் இல்லை. எப்படியோ திரும்ப சென்னை வந்தாச்சு. அடுத்த முறை மதுரை போனால் விளக்குதூண் அசோக் புரோட்டா கடை தான் ப்ளான். அதை பற்றி அடுத்த ட்ரிப்பிற்கு பின் எழுதுகிறேன்
ஓர் இரவு என் மச்சானுடன் பன் புரோட்டா கடையை நோக்கி ஒரு பயணம். அண்ணா நகர் ஆவின் பாலகம் அருகாமையில் உள்ள புகழ்பெற்ற பன் புரோட்டா கடை தான் செல்வதாக நினைத்தேன். ஆனால் மச்சானோ அது ரோட்டோரக் கடை அதனால் வேறு கடை செல்வோமென சொல்ல, வண்டியை ஆவின் சிக்னலில் இடது பக்க வாட்டில் சிவகங்கை ரோட்டில் திருப்பினேன்.
சிறிது தூரம் சென்றதும் (கோனார் மெஸ் தாண்டியதும்) வலது பக்கத்தில் ஒரு கூரை வேய்ந்த கடையை சுற்றி ஒரு கும்பல் நின்று கொண்டு இருந்தது. கடைக்கு பேர் கிடையாது. அதனால் மக்கள் கூரை கடை என்றுதான் அழைப்பார்கள்.
இருவரும் உள் நுழைந்து சாப்பிட இடத்தை பிடித்தோம். மிகச்சிறிய உணவகம். குடும்பதோடு செல்ல உகந்தது அல்ல. அதனால் தானோ என்னவோ பார்சலுக்கு நிறைய பேர் வந்திருந்தனர். இலை வைத்த பிறகு, ஆளுக்கு ரெண்டு புரோட்டாவும்(ஒன்று 15₹) பிறகு ஒரு மட்டன் சுக்காவும்(90₹), வழியல் (similar to scrambled egg..சென்னையில் கலக்கி என்றழைக்கப்படும்) மற்றும் ஆம்லெட் சொன்னோம்.
பன் புரோட்டா தாருமாறு டேஸ்ட். மேல் பகுதி மொறு மொறுப்பாகவும் உட்பகுதி மென்மையாகவும் மிக மிக அருமை. இங்கு விசேஷம் என்னவென்றால் புரோட்டாவிற்கு கொடுக்கப்படும் பல வகையான க்ரேவீஸ். பாயா, ஈரல் குழம்பு, எழும்பு குழம்பு மற்றும் குடல் குழம்பு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. ஈரல் குழம்பு தான் சிறிது உரைப்பு அதிகம்.
மட்டன் சுக்காவில் வெங்காயம் தான் அதிகம், ஆனால் சுவையில் எந்த குறையுமில்லை.
அது என்ன மாயமோ தெரியலை, மதுரையில் மட்டும் புரோட்டாவிற்கும் கூட கொடுக்கற சால்னாவிற்கும் அப்படி ஒரு சுவை. சென்னையில் அப்படி ஒரு சுவையான பரோட்டாவை பார்த்தும் இல்லை சுவைத்தும் இல்லை. எப்படியோ திரும்ப சென்னை வந்தாச்சு. அடுத்த முறை மதுரை போனால் விளக்குதூண் அசோக் புரோட்டா கடை தான் ப்ளான். அதை பற்றி அடுத்த ட்ரிப்பிற்கு பின் எழுதுகிறேன்
Subscribe to:
Comments (Atom)






















