Thursday, December 13, 2018

கேழ்வரகு மற்றும் அரிசி புட்டு

சிறு வயதில் நமக்கு கிடைத்த அரிய திண்பண்டங்களை இப்போது பார்த்தால் எப்படி இருக்கும். இன்று காலை காமராஜர் சாலையில் செல்லும் போது அரசமரம் பிள்ளையார் கோவில் எதிரில் உட்கார்ந்திருந்த பெரியவர் எதோ ஒன்றை விற்பனை செய்ததையும் சுற்றிலும் சிலர் அதை வாங்கி கொண்டிருந்ததையும் பார்க்க நேரிட்டது. பக்கத்தில் சென்றால், அரிசி மற்றும் கேழ்வரகு புட்டை பெரிய டபரா சட்டியில் வைத்து விற்பனை செய்துகொண்டிருந்தார்.


தொண்ணூருகளின் ஆரம்ப காலங்களில் பாண்டிய வேளாளர் தெரு சந்தையில் ஒருவர் தினமும் காலையில் இவ்விறு வகை புட்டுகளையும் விற்பார், அதை 25 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ஞாபகம். இப்போதெல்லாம் அவர் சந்தைக்கு வருவதில்லை. சென்னையில் எங்கும் இவ்வகை பண்டங்களை பார்த்தது இல்லை.




உதிர்ந்த கேழ்வரகு மற்றும் அரிசி புட்டுகளை தேங்காய் துருவல் சேர்த்து சில பாக்கெட்டுகள் (ஒன்று 10₹) வாங்கிய பின் வண்டியை வீட்டிற்கு திருப்பினேன். இரண்டுமே சுவை மிகுந்தவை, அதிலும் அரிசி புட்டு 👌👌👌

முக்கியமான விஷயம், காலையில்(6 - 8 மணி) மட்டுமே இது கிடைக்கும்.


No comments:

Post a Comment