தொண்ணூருகளின் ஆரம்ப காலங்களில் பாண்டிய வேளாளர் தெரு சந்தையில் ஒருவர் தினமும் காலையில் இவ்விறு வகை புட்டுகளையும் விற்பார், அதை 25 பைசா கொடுத்து வாங்கி சாப்பிட்ட ஞாபகம். இப்போதெல்லாம் அவர் சந்தைக்கு வருவதில்லை. சென்னையில் எங்கும் இவ்வகை பண்டங்களை பார்த்தது இல்லை.
உதிர்ந்த கேழ்வரகு மற்றும் அரிசி புட்டுகளை தேங்காய் துருவல் சேர்த்து சில பாக்கெட்டுகள் (ஒன்று 10₹) வாங்கிய பின் வண்டியை வீட்டிற்கு திருப்பினேன். இரண்டுமே சுவை மிகுந்தவை, அதிலும் அரிசி புட்டு 👌👌👌
முக்கியமான விஷயம், காலையில்(6 - 8 மணி) மட்டுமே இது கிடைக்கும்.




No comments:
Post a Comment