Saturday, August 24, 2019
தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல்
ஜார்ஜ் டவுனை சுற்றி சில பல வேலைகளை முடித்து விட்டு மதிய வேளையில் நல்ல பசியுடன் தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல் எனப்படும் கட்டையன் செட்டியார் ஓட்டலுக்கு நானும் நண்பரும் வந்தடைந்தோம். கந்தகோட்டம் கோயிலில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவில் ராசப்ப செட்டி தெருவில் அமைந்திருக்கிறது இந்த பழமையான உணவகம்.
அதிகபட்சம் ஆறு பேர் தான் உட்கார்ந்து சாப்பிட முடியும். விறகு அடுப்பு சமையல் தான். மட்டன் புலவும் கறி தோசையும் ஆர்டர் செய்தோம். முதலில் வந்தது மட்டன் புலவு(170₹). கடினமான கறி. சற்று வித்தியாசமான புலவு. நிறைய பேருக்கு பிடிக்க வாய்ப்பில்லை. அதன் மேல் ஊற்றிய குழம்பு சற்று subtleஆன சுவை. இரண்டு பேரும் ஷேர் செய்ததால் சீக்கிரம் முடித்து விட்டோம்.
அடுத்து வந்தது கறி தோசை(140₹), நாங்கள் இவ்வளவு தூரம் வந்ததுக்கு காரணமே அதுதான். நல்ல பெரிய தோசை. அதுக்கு குடுத்த க்ரேவி எங்களை 90'களுக்கு கூட்டிச் சென்றது. ஆம் அப்படி ஒரு காரமும் சுவையும் மிகுந்த க்ரைவியை சென்னையில் சாப்பிட்டு பல பல வருடங்கள் ஆகிவிட்டது. சுடச்சுட கறி தோசையை க்ரேவியில் தொட்டு சாப்பிட, ஆகா அபாரமான சுவை. சென்னையில் மிஸ் பண்ண கூடாத சுவைகளில் இந்த ஓட்டல் கறி தோசை கண்டிப்பாக இடம்பெறும்.
கூகிள் வழிகாட்டி:
Tuesday, August 13, 2019
அப்பா மெஸ்
மதுரையில் பரோட்டா சாப்பிட்டவங்க சென்னையில் பரோட்டா சாப்பிடவே
ஒன்றுக்கு ரெண்டு வாட்டி யோசிப்பார்கள். அப்படியில்லாமல் பரோட்டாவுக்கெனவே
சிறந்த உணவகங்களில் ஒன்றுதான் விருகம்பாக்கம் சாய் நகரில் அமைந்துள்ள
"அப்பா மெஸ்".
இரவு உணவுக்கு இந்த உணவகத்திற்கு செல்ல நேர்ந்தது. சிக்கன் வாழை இலை சுட்ட பரோட்டாவும்(160₹) கொத்து பரோட்டாவும்(100₹) ஆர்தர் செய்தோம்.
இரவு உணவுக்கு இந்த உணவகத்திற்கு செல்ல நேர்ந்தது. சிக்கன் வாழை இலை சுட்ட பரோட்டாவும்(160₹) கொத்து பரோட்டாவும்(100₹) ஆர்தர் செய்தோம்.
வாழை இழையில் இரண்டு
பரோட்டாவும் இரண்டிற்கும் நடுவில் சிக்கன் கறி வைத்து கொழம்பும் ஊற்றி
வாழைநாரால் கட்டி விடுவார்கள். ஆர்டர் வந்த பிறகு சூடான தோசைக்கல்லில்
கட்டிய வாழை இலையை வைத்து சுற்றி தண்ணீர் தெளித்து சுடச்சுட நமக்கு
தந்தார்கள். பரோட்டா சிக்கன் குழம்பில் ஊரி செம soft. இதுக்காகவே அடிக்கடி
இங்க வரலாம் போல. திரும்பி பார்த்தால் எல்லா டேபிலிலும் இததான் ஆர்டர்
பண்ணியிருந்தனர். என்ன மூனே மூனு சிக்கன் பீஸ்தான் இருந்தது, அதுவும்
எழும்புதான் அதிகம். இந்த மாதிரி மட்டன், நாட்டு கோழி, குடல் மற்றும்
தலைக்கறியுடனும் கிடைக்கும்.
கொத்து பரோட்டாவும் நன்றாகவே இருந்தது. தொட்டுக்க வெங்காய பச்சடியும் மட்டன் கொழம்பும் தந்தனர். கடைசியாக ஒரு பன்னீர் கோலி சோடா (25₹) ஒரே மடக்கில் முடிந்தது.
விலாசம்:
7, 1st Main Rd, Sai Nagar, Virugambakkam, Chennai - 600092
கூகிள் வழிகாட்டி:
கொத்து பரோட்டாவும் நன்றாகவே இருந்தது. தொட்டுக்க வெங்காய பச்சடியும் மட்டன் கொழம்பும் தந்தனர். கடைசியாக ஒரு பன்னீர் கோலி சோடா (25₹) ஒரே மடக்கில் முடிந்தது.
விலாசம்:
7, 1st Main Rd, Sai Nagar, Virugambakkam, Chennai - 600092
கூகிள் வழிகாட்டி:
மயிலை பாரதி மெஸ்
ஞாயிறு காலை வேளை மயிலை கற்பகாம்பாள் மற்றும் கபாலீஸ்வரர் கோயிலில்
தரிசனம் முடித்துவிட்டு பசியுடன் பொன்னம்பல வாத்தியார் தெருவில் நல்ல
உணவகம் நோக்கிய தேடல். ஜன்னல் கடைக்கு முன்பாக நின்றேன். ஆனால்
குழந்தையுடன் உட்கார்ந்து சாப்பிட வேண்டும் என்பதால் எதிரில் அமைந்துள்ள
பாரதி மெஸிற்குள் சென்றோம்.
பல வருடங்களுக்கு முன் திருவள்ளிக்கேணி பாரதி மெஸ்ஸில் நண்பர் மோகனுடன் அடிக்கடி உணவருந்துவது உண்டு. வயிற்றுக்கு எந்த பாதகமும் செய்யாத உணவு. உணவகத்தின் உரிமையாளர் மகாகவி பாரதியாரின் பக்தர். உணவகம் முழுவதும் பாரதியின் புகைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய குறிப்புகள்.
பல வருடங்களுக்கு முன் திருவள்ளிக்கேணி பாரதி மெஸ்ஸில் நண்பர் மோகனுடன் அடிக்கடி உணவருந்துவது உண்டு. வயிற்றுக்கு எந்த பாதகமும் செய்யாத உணவு. உணவகத்தின் உரிமையாளர் மகாகவி பாரதியாரின் பக்தர். உணவகம் முழுவதும் பாரதியின் புகைப்படங்கள் மற்றும் அவரைப் பற்றிய குறிப்புகள்.
இட்லி ரெடியாக நேரமாகும் என்பதால் பொங்கல்(40₹), சிறுகீரை தோசை(38₹)
மற்றும் மெது வடை(15₹) வரவழைத்தோம். சாம்பாரும் மூன்று வகையான சட்னியும்
(தேங்காய், தக்காளி, புதினா) ஒவ்வொரு டேபிளிலும் வைக்கப்பட்டிருந்தது. குறை
என்று சொல்ல ஒன்றும் இல்லை. அனைத்துமே அருமை.
முன் வந்த பொங்கலையும் தோசையையும் சாப்பிட்டு முடிக்கவும் தட்டு இட்லி(45₹) ரெடியாகவும் நேரம் சரியாக இருந்தது. சரி அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும் என்று ஒரு ப்ளேட் சொன்னேன். அகலமான இட்லி சிறு ப்ளேட்டில் வைத்து அதன் மேல் இட்லி பொடி தூவி நெய் விட்டு ஆவி பறக்க வந்தது. ஒரு விள்ளல் எடுத்து புதினா தேங்காய் சட்னியுடன் சாப்பிட வழுக்கிக்கொண்டு உள் சென்றது. நல்ல நெய் வாசம். சில நிமிடங்களில் இட்லி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.
கடைசியாக சுமிதி பால்(18₹) வந்தது. சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சூடான பால் சுவைக்க அப்படியே வீட்டில் சுவைத்த மணம். அனைத்தும் சேர்ந்து மொத்தம் நூற்றி எழபத்தைந்து ரூபாய் மூவருக்குமான காலை உணவு. விலை அதிகமில்லை. மதியம் வந்தால் காய்கறி சாதம் சாப்பிட்டு பாருங்க. அத்துடன் மயிலை பயணத்தை முடித்து கொண்டோம்.
முன் வந்த பொங்கலையும் தோசையையும் சாப்பிட்டு முடிக்கவும் தட்டு இட்லி(45₹) ரெடியாகவும் நேரம் சரியாக இருந்தது. சரி அதை மட்டும் ஏன் விட்டு வைக்கணும் என்று ஒரு ப்ளேட் சொன்னேன். அகலமான இட்லி சிறு ப்ளேட்டில் வைத்து அதன் மேல் இட்லி பொடி தூவி நெய் விட்டு ஆவி பறக்க வந்தது. ஒரு விள்ளல் எடுத்து புதினா தேங்காய் சட்னியுடன் சாப்பிட வழுக்கிக்கொண்டு உள் சென்றது. நல்ல நெய் வாசம். சில நிமிடங்களில் இட்லி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது.
கடைசியாக சுமிதி பால்(18₹) வந்தது. சுக்கு, மிளகு, திப்பிலி கலந்த சூடான பால் சுவைக்க அப்படியே வீட்டில் சுவைத்த மணம். அனைத்தும் சேர்ந்து மொத்தம் நூற்றி எழபத்தைந்து ரூபாய் மூவருக்குமான காலை உணவு. விலை அதிகமில்லை. மதியம் வந்தால் காய்கறி சாதம் சாப்பிட்டு பாருங்க. அத்துடன் மயிலை பயணத்தை முடித்து கொண்டோம்.
Subscribe to:
Comments (Atom)
























