Saturday, August 24, 2019

தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல்



ஜார்ஜ் டவுனை சுற்றி சில பல வேலைகளை முடித்து விட்டு மதிய வேளையில் நல்ல பசியுடன் தஞ்சாவூர் மிலிட்டரி ஓட்டல் எனப்படும் கட்டையன் செட்டியார் ஓட்டலுக்கு நானும் நண்பரும் வந்தடைந்தோம். கந்தகோட்டம் கோயிலில் இருந்து இருநூறு மீட்டர் தொலைவில் ராசப்ப செட்டி தெருவில் அமைந்திருக்கிறது இந்த பழமையான உணவகம்.







அதிகபட்சம் ஆறு பேர் தான் உட்கார்ந்து சாப்பிட முடியும். விறகு அடுப்பு சமையல் தான். மட்டன் புலவும் கறி தோசையும் ஆர்டர் செய்தோம். முதலில் வந்தது மட்டன் புலவு(170₹). கடினமான கறி. சற்று வித்தியாசமான புலவு. நிறைய பேருக்கு பிடிக்க வாய்ப்பில்லை. அதன் மேல் ஊற்றிய குழம்பு சற்று subtleஆன சுவை. இரண்டு பேரும் ஷேர் செய்ததால் சீக்கிரம் முடித்து விட்டோம்.




அடுத்து வந்தது கறி தோசை(140₹), நாங்கள் இவ்வளவு தூரம் வந்ததுக்கு காரணமே அதுதான். நல்ல பெரிய தோசை. அதுக்கு குடுத்த க்ரேவி எங்களை 90'களுக்கு கூட்டிச் சென்றது. ஆம் அப்படி ஒரு காரமும் சுவையும் மிகுந்த க்ரைவியை சென்னையில் சாப்பிட்டு பல பல வருடங்கள் ஆகிவிட்டது. சுடச்சுட கறி தோசையை க்ரேவியில் தொட்டு சாப்பிட, ஆகா அபாரமான சுவை. சென்னையில் மிஸ் பண்ண கூடாத சுவைகளில் இந்த ஓட்டல் கறி தோசை கண்டிப்பாக இடம்பெறும்.



கூகிள் வழிகாட்டி:

No comments:

Post a Comment