Tuesday, March 27, 2018

திருச்சி நியூ குறிஞ்சி உணவகம்

ஏற்கனவே இவ்வுணவகத்தை பற்றி எழுதியுள்ளேன். ஆனால் இன்று உண்ட காலை உணவு மறுபடியும் எழுதத்தூண்டியது.


உடன் வந்த மற்றவர்கள் அனைவரும் காம்பிளிமன்டரி பிரேக்பாஸ்ட் சாப்பிட, எனக்கு மட்டும் ஒரு பொங்கல்(45) வடை(13) ஆர்டர் செய்தேன்.
அவர் அறுபதை கடந்த நபர் போலிருந்தார். ஆனால் சுறுசுறுப்பில் இளைஞர். ஒரு பொங்கல் வடையை வச்சிட்டு இரண்டு வகை சட்னி, எள்ளு பொடி, சாம்பார், கடலைக்கறி மற்றும் கத்தரிக்காயில் செய்த ஒரு வித கொழம்பு என வச்சு தள்ளிட்டார். சுவை வழமைபோல அபாரம். வடை சிறியதாக இருந்தாலும் அந்த விலைக்கு அது வொர்த்து. பொங்கள் என் ஒருவனுக்கு அதிகமான அளவே.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வந்தால் சஞ்கீதா செல்வதை விட இங்கு வந்து பாருங்கள். பர்சுக்கு பங்கம் வைக்காத ஓர் சைவ உணவகம்.

கூகிள் வரைபடம்:

No comments:

Post a Comment